Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, அமைச்சர்களுக்கு பிறப்பித்த கரார் உத்தரவு..

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (09:08 IST)
பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு பல கராரான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பல கடுமையான உத்தரவுகளை அமைச்சர்களுக்கு பிறப்பித்தார். அதன் படி, மத்திய அமைச்சர்கள் தங்களது உறவினர்களை அரசு பணியில் அமர்த்த கூடாது எனவும், அமைச்சர்கள் தினமும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணிக்குள் வர வேண்டும், இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும், அதற்காக நாம் பாடுபட வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளது கூறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவித்த பிறகு அந்த பகுதிகளுக்கான சிறப்பு திட்டங்களையும் வகுக்கவேண்டும் என பாஜக அரசு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments