Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிக்ஸ் மாநாட்டுக்கு புறப்பட்டார் மோடி..

Arun Prasath
செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:47 IST)
பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டு வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதி பிரேசில் நாட்டின் தலைநகர் பிரெசிலியாவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில், நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து சந்திப்புகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களிடம் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்கிவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments