Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹைட்ரோ கார்பன் துறை முதலீடு: அழைப்பு விடுத்த மோடி!!

ஹைட்ரோ கார்பன் துறை முதலீடு: அழைப்பு விடுத்த மோடி!!
, புதன், 7 டிசம்பர் 2016 (16:39 IST)
இந்திய ஹைட்ரோ கார்பன் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். 


 
 
இந்தியாவில் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும்.
 
பொருளாதார மேம்பாட்டின் அடிப்படை கட்டுமானத்தில் முக்கிய அம்சமாக பெட்ரோலியம் உள்ளது. பெட்ரோலியத்தின் சீரான மற்றும் சரியான விலை பொருளாதாரத்தை வளர்க்கும்.
இந்தியாவின் வளர்ச்சியில் ஹைட்ரோ கார்பன் முக்கிய பங்கு கொண்டதாக இருக்கும்.

பெட்ரோலிய உற்பத்தியும், குறிப்பாக ஹைட்ரோ கார்பனும் எதிர்கால இந்தியா குறித்த என்னுடைய லட்சிய இலக்கில் முக்கியமானவை. 2022-ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் இறக்குமதியை குறைக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
 
மேலும் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹைட்ரோகார்பன் துறையின் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மோடி அழைப்பு விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் ஒரு மரண வியாபாரி - மோடியை கலாய்க்கும் சோ (வீடியோ)