Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (17:02 IST)
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்னவென்று ஆராய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு...
 
பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 
 
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். 
 
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. 
 
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments