Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறிய மோடி

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (14:30 IST)
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார்.


 

 
அவரின் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடியுள்ளனர். 
 
இந்நிலையில் பிரதமர் மோடி, ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அதன் பின் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கிருந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 
 
மோடி அருகில் வந்ததும் சசிகலா கண்ணீர் விட்டார். அப்போது, சசிகலாவின் தலையில் கை வைத்து மோடி ஆறுதல் கூறினர். அருகில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும் கதறி அழுதார். அவரின் கை பிடித்து மோடி ஆறுதல் கூறினார்.
 
அதன் பின், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments