Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது… மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (07:52 IST)
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் டெல்லியில் நேற்றிரவு 9.51 மணிக்குக் காலமானார். அவரது மறைவு இந்திய அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மன் மோகன் சிங் குறித்து “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்துள்ளது.  எளிய பின்புலத்தில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் இந்திய அரசில் நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டார்.  பொருளாதாரக் கொள்கைகளில் வலுவான முத்திரையைப் பதித்தார். மக்களின் வாழ்வு மேம்பட பல விரிவான முயற்சிகளை செயல்படுத்தினார்” என அவர் நினைவைப் போற்றியுள்ளார்.

1932ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியில் (தற்போதைய பஞ்சாப்) பிறந்தவர் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலில் முக்கிய பங்கு வகித்த பொருளாதார மேதையான இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். 32 ஆண்டுகளுக்கு மேல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments