Webdunia - Bharat's app for daily news and videos

Install App

59 நிமிடத்தில் லோன் வாங்கலாம் –மோடியின் புதிய திட்டம்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (10:42 IST)
சிறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்களுக்குத் தேவையான கடனை தேவையான சான்றுகளோடு விண்ணப்பித்து 59 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற அதிரடி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கியுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் நிறுவனங்கள் மத்திய அரசின் மீது மோடி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளன.

இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசு இப்போது பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக நலிந்து வரும் சிறு நிறுவனங்களைக் காப்பாற்றும் பொருட்டு அவைகளுக்கு எளிதாகக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி தக்க சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற அவர் கூறியது ‘இந்த திட்டத்தின் படி ஜிஎஸ்டியின் கீழ் முறையாக ரிட்டன் தாக்கல் செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டியில் இருந்து 2 விழுக்காடு தள்ளுபடியும் உண்டு. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 72000 நிறுவனங்கள் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயரும். இதில் விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்கப்படும்; என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments