Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாரைக் கண்டும் பயம் வேண்டாம் : ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

யாரைக் கண்டும் பயம் வேண்டாம் : ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (21:20 IST)
மூத்த அதிகாரிகளை கண்டு பயப்படக்கூடாது என்று இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.


 

 
2014ஆம் ஆண்டு தேர்வாகி, பயிற்சி காலத்தை நிறைவு செய்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்னிலையில் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
 
“நீங்கள் பயிற்சியின் போது கற்றுக் கொண்டதை விட, உங்களது திறமையை காட்டும் வாய்ப்பு தற்போது உங்களுக்கு கிடைத்துள்ளது.  அடுத்த மூன்று மாதங்களில், நீங்கள் உங்கள் சுய முயற்சியை வளர்த்து கொள்ள வேண்டும். தாங்கள் செல்லும் துறைகளுடன் இணைத்து கொள்ளுங்கள். சூழ்நிலையுடன் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
பொது மக்களுடன் இணைந்து பொறுப்புடன் பணியாற்றுங்கள். நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். மூத்த அதிகாரிகள் அதிகாரத்திற்கு அடிபணியாமல், நேர்மையாகவும் தைரியமாகவும் பணிபுரியுங்கள்” என்று பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தியார் போல் இன்று நடந்தேன் : டிவிட்டரில் கூறிய கமல்ஹாசன்