Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி குற்றச்சாட்டு..!

Mahendran
செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:38 IST)
ராகுல் காந்தி மட்டுமல்ல, அவரது குடும்பமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு அவர் தேர்தல் பிரச்சாரமாக காணொளி மூலம் பேசினார்.

அப்போது, ராகுல் காந்தி மட்டுமின்றி அவரது மூதாதையர்களான ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி உள்பட அனைவரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்றும், 1990களுக்கு பின்னர் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் என அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தான் இட ஒதுக்கீடு பரவலாகப்பட்டது என்றும், இட ஒதுக்கீட்டின் மூலம் தலித் மக்கள் பல நன்மைகளை பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments