தொழிலதிபர் போனை ஹேக் செய்து ரூ.1 கோடி பணம் மோசடி செய்த மர்ம கும்பல்: போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (17:17 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரின் போனை ஹேக் செய்து அவருடைய போனில் இருந்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற நகரில் ஒரு தொழிலதிபர் ஒருவரின் மொபைல் போனை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். அதன் பின்னர் அந்த மொபைலில் இருந்து ரூபாய் 99.50 லட்ச ரூபாய் பணத்தை தங்களுடைய வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
 
தொழிலதிபரின் போன் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களில் ஹேக் செய்யப் பட்டதாகவும் அதன் மூலம் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments