Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''மொபைல் கட்டணம் உயரவுள்ளது - Vodafone-Idea தலைவர் தகவல்

5g network
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:57 IST)
சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம்  நடந்தது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா நெட்வோர்க், அதானி டேட்டா நெட்வோர்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த 5 ஜி ஏலத்தில், ரூ.1.40 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொபைல் போன் சேவை கட்டண உயர்வு குறித்து , வோடபோன் ஐடியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கூர் கூறியுள்ளதாவது:

அனைத்துவித போன் சேவை கட்டணங்களும் இந்த ஆண்டின் இறுதியில் அதிகரிக்கும். 5ஜி ஸ்பெக்ரம் ஏலத்திற்கு என சில தொகைகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், 5 ஜி கட்டணம் என்பது 4 ஜி கட்டண சேவையைவிட அதிகரிக்கும்.

இன்ட 5ஜி சேவையில், கூடுதல் டேட்டா இருக்கும், இதனால், நுகர்வும் அதிகரிக்கும். வாடிக்கைளரின் வரவேற்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவமம் ரூ.18,500 மதிப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்!