Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூ குற்றம் சுமத்திய பெண் மீது வழக்கு தொடா்ந்தாா் எம்.ஜே.அக்பா்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (16:03 IST)
அண்மையில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். 
 
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர் பாலியல்  புகார் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த பெண் பத்திரிகையாளரிடம்  தவறாக நடந்துகொண்டதாக சிலா் மீ டூ (MeToo) என்ற ஹேஷ்டேக்கில் குற்றம் சாட்டியிருந்தனா். நைஜீரியாவில் தங்கியிருந்த அக்பா் பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று இந்தியா வந்த அக்பா் அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அந்த அறிக்கையில் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும் பொதுத்தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது என்மீது இந்த குற்றச்சாட்டை உள்நோக்கத்தோடு முன்வைக்கின்றனர். 
 
என்மீதான இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க  பொய்யானவை, இந்த புகாரை நான் சட்ட ரீதியாக எதிா்கொள்வேன் என்று எம்.ஜே.அக்பா் தொிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

விஜய் கூட சேர்ந்தா நல்லா இருக்கும்.. நிர்வாகிகள் விருப்பம்! - ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை!

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அடுத்த கட்டுரையில்