Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரம் கல்குவாரி விபத்து: 8 பேர் உடல்கள் மீட்பு!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:14 IST)
மிசோரம்  மாநிலத்தில் உள்ள  நத்தியால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து  8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில், முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிஷோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நத்தியால் மாவட்டம் மவ்தார் என்ற கிராமத்தில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் வழக்கம் போல் பணியாளர்கள் பணி செய்து வந்தனர்.

அப்போது.  திடீரென்று கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்தன. இதில், 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் இன்று காலையில் மீட்புப் பணியை ஆரம்பித்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 8 தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 4 தொழிலாளர்களின் உடலை தேடும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments