Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காம்பீரை காணவில்லை... டெல்லியை உலுக்கும் போஸ்டர்கள்!!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (11:52 IST)
கவுதம் காம்பீரை காணவில்லை என டெல்லியில் போஸ்டர் அங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மக்களவை தேர்தலின் போது டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள காற்று மாசு நெருக்கடி குறித்து விவாதிக்க உயர்மட்ட நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு காம்பீரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வர்ணணையாளராக இருப்பதால் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. 
இதுமட்டுமல்லாமல் அங்கு தனது நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டு கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து இப்போது டெல்லி ஐஓடி பகுதியில், காம்பீரை கானவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், இவரை காணவில்லை, யாரேனும் பார்த்தீர்களா? கடைசியாக இவரை பார்த்தது, இந்தூரில் ஜிலேபி உண்ட போது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments