Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் தொகை அதிகரிப்புக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்.. மத்திய அமைச்சரின் கண்டுபிடிப்பு..!

Advertiesment
cencus
, வெள்ளி, 10 மார்ச் 2023 (07:54 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இதனால் தான் கர்நாடக மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்ததாகவும் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் வர இருப்பதை அடுத்து தற்போதே தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கிவிட்டன என்பதும் குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மாநிலத்தில் தேர்தல் களை தொடங்கியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா.. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்குமா?