Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரியின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (18:00 IST)
டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சந்தீப் குமாரின் ஆபாச சிடியை வெளிட்ட அவரின் உதவியாளர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சிடியில் அமைச்சருடன் இருந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அவர், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.

அதன்பேரில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சரை கைது செய்தனர். அமைச்சரிடம் காவல் தூரையினர் நடத்திய விசாரணையில் மந்திரி பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சிடியை அவரது உதவியாளர் தான் வெளியிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அமைச்சரின் உதவியாளரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்