Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

Siva
திங்கள், 27 மே 2024 (08:28 IST)
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆட்சியில் ஒரே நாடு ஒரே தேர்தல் உறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறுகையில் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மோடி அரசின் அடுத்த ஆட்சியில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் வெயில் காலத்தில் தேர்தல் நடத்துவதை காட்டிலும் குளிர் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சிந்தித்து வருகிறோம் என்றும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் செலவுகள் குறையும் என்றும் அவர் கூறினார்

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். மொத்தத்தில் மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்பது அமித்ஷாவின் இந்த பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments