Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

Siva
திங்கள், 17 பிப்ரவரி 2025 (07:36 IST)
டெல்லியில் இன்று காலை திடீரென நிகழ்ந்த சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து வருகின்றன.
 
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5:36 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
நில அதிர்ச்சியை படுக்கையில் உணர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், சில வினாடிகள் அதிர்வை உணர்ந்ததாகவும், அதனால் வீட்டை விட்டு அச்சத்துடன் வெளியே ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments