Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ நகரங்களில் பரவுவதில் 75% ஒமிக்ரான்..? – அதிர்ச்சி தகவல்!!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:10 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் முக்கிய நகரங்களில் பெரும்பாலும் ஒமிக்ரான் வைரஸே பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டு வகை தொற்றும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் ஒமிக்ரான் 12% ஆக இருந்த நிலையில் தற்போது 28% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நோய்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா பேசும்போது “பெரிய மெட்ரோ நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தான் 75% அளவுக்கு ஓமைக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் மூன்றாவது அலை ஒமிக்ரானால்தான் ஏற்பட உள்ளது என்பதை காண முடிகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments