Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை; மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை; மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (12:47 IST)
கடந்த சில வாரங்களில் மும்பையில் கனமழை பெய்து வெள்ளமாக காட்சியளிக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் கடந்த மாதத்தில் டவ்தே புயல் உருவாகி கடந்த பின்னரும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தற்போது மும்பையில் மழை தொடரும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கனவே மும்பை மழை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே அடியா உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் மறந்திடுங்க!