Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதத்தில் 2 கோடி பேஸ்புக், இன்ஸ்டா பதிவுகள் நீக்கம்! – மெடா நிறுவனம் தகவல்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:35 IST)
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 கோடி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தாய் நிறுவனமான மெடா தெரிவித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் உள்ளிட்ட சமூக செயலிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி பேஸ்புக் நிறுவனம் தனது நிறுவன பெயரை மெடா என மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த அக்டொபர் 1 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2 கோடி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கியுள்ளதாக மெடா தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவுகள் என மற்ற கணக்குகளால் புகார் அளிக்கப்படுபவை, AI மூலமாக கண்டறியப்பட்ட பதிவுகள், பாலியல் தொடர்பான பதிவுகள் என பேஸ்புக்கிலிருந்து 1.8 பதிவுகளையும், இன்ஸ்டாகிராமிலிருந்து 30 லட்சம் பதிவுகளையும் மெடா நீக்கியுள்ளது. இதில் 1.7 லட்சம் பதிவுகள் கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், ஆபாசமான சொற்களை பயன்படுத்துதல் ஆகியவற்றிற்காக நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்