Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள்- மெகபூபா முஃப்தி கண்டனம்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:50 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் பறிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மெகபூபா “இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்துகு ஒரு கருப்பு நாள் ஆகும். 1947 ல் ஏற்கப்பட்ட இருநாட்டு முடிவை மறுத்து காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள். விதி எண் 370 ஐ விலக்கி கொள்வது சட்ட விரோதமானது. இது இந்திய துணைக்கண்டத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைய போகிறது. காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதே இந்திய அரசின் எண்ணம். இதன்மூலம் இந்தியா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments