Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது: காஷ்மீரில் பரபரப்பு

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:53 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர்  தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதுகுறித்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நாளை மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
 
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments