Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி: தாயும் சேயும் நலம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (13:59 IST)
ஓடும் ரயிலில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி அவருக்கு பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது 
 
இதனை அடுத்து அதே ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவி சுவாதி என்பவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் 
 
நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து துரிதமாக செயல்பட்ட அந்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் விசாகப்பட்டினம் வந்ததும் தாய் மற்றும் சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments