இந்தியா இந்துக்களின் நாடு..! ஆ.ராசா கருத்துக்கு பிரேமலதா கண்டனம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (13:49 IST)
இந்துக்கள் குறித்து ஆ.ராசா ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் “இந்துக்கள் யார்?” என்பது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ஆ.ராசா “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!” என்று பேசியிருந்தார்.


ஆ.ராசாவின் கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆ.ராசாவின் கருத்தை கண்டிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “இந்தியா இந்துக்கள் நாடு. இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. தேமுதிக என்றுமே ஒரு சாதி, மத பாகுபாடு இன்றி மக்களின் நன்மைக்காக செயல்படும், அதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சி” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments