Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி: தாயும் சேயும் நலம்!

pregnant
, புதன், 14 செப்டம்பர் 2022 (13:59 IST)
ஓடும் ரயிலில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி அவருக்கு பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது 
 
இதனை அடுத்து அதே ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவி சுவாதி என்பவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் 
 
நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து துரிதமாக செயல்பட்ட அந்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் விசாகப்பட்டினம் வந்ததும் தாய் மற்றும் சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா இந்துக்களின் நாடு..! ஆ.ராசா கருத்துக்கு பிரேமலதா கண்டனம்!