Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'நான் தான் பிரதமர்: கறாராக பேசும் மாயாவதியால் உடைகிறது 3வது அணி!

Advertiesment
மாயாவதி
, புதன், 22 மே 2019 (20:46 IST)
நான் தான் பிரதமர் வேட்பாளர். என்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தால் மட்டுமே 3வது அணிக்கு ஆதரவு என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கறாராக கூறி வருவதால் மூன்றாவது அணி சிதறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
நாளை இந்நேரம் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி அமைக்க முடியாவிட்டால் மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் என்றும் இந்த அணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் இந்த மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதுதான் தற்போதைய பிரதான கேள்வியாக உள்ளது. பிரதமர் ரேஸில் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், நிதிஷ்குமார், சரத்பவார் என ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கின்றது.
 
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து உள்ளதாகவும், இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒருசிலர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் மூன்றாவது அணி சிதற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடப்பாவிகளா! இப்படியெல்லாமா போஸ்டர் அடிச்சு ஒட்டுவீங்க!