Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த கணக்கு டீச்சர்!

மாணவியை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த கணக்கு டீச்சர்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (15:32 IST)
பெங்களூரில் 28 வயதான கணித ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவருக்கு கருத்தடை மாத்திரை வழங்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


 
 
பெங்களூர் இல்யாஸ் நகரை சேர்ந்தவர் அருண் பாஷா. தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த அவர் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதான 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
 
இதனையடுத்து அந்த மாணவியை பள்ளிக்கு வெளியே சந்தித்த ஆசிரியர் அருண் பாஷா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர் மாணவியை அடிக்கடி பள்ளிக்கு வெளியே சந்தித்து வினாத்தாள்களை வழங்கி மாணவியிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார்.
 
இந்நிலையில் ஒருநாள் மாணவியை தனியார் ஹோட்டலுக்கு ஆசிரியர் அருண் பாஷா அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த பின்னர் மாணவிக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரை கொடுத்துள்ளார்.
 
பின்னர் மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் அருண் பாஷாவை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்