Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (14:47 IST)
தமிழகத்தில் வர்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பு அசோசெம் அறிவித்துள்ளது.


 

 
நேற்று முன்தினம் வர்தா புயல் வடதமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்தது. வர்தா புயல் காரணமாக சென்னையில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
 
வர்தா புயலால் தமிழகத்தில் ரூ.6,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பு அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
தோட்டங்கள், வயல்கள் போன்றவை அழிந்துவிட்டன. பல இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளது. நகர்ப்புறங்களில் கார்கள், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
 
புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 
ரெயில், விமானம், பேருந்து என அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை பாதிக்கப்பட்டன. 
 
வர்தா புயல் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் ரூ.6 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வாறு அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments