எனது மாநிலம் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்: பிரதமர் மோடிக்கு அவசர கோரிக்கை வைத்த மேரிகோம்..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (14:41 IST)
எனது மாநிலம் மணிப்பூர் பற்றி தெரிகிறது தயவுசெய்து உதவி செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை முதல் இரு பிரிவினர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இன மோதல் தொடர்ந்து வருவதாகவும் தமிழர்களின் 25 வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள் என பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
மணிப்பூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பட்டியல் இனத்தில் சேர்ப்பது தொடர்பாக கோரிக்கை விடப்பட்டு அந்த கோரிக்கை போராட்டமாக மாறி தற்போது வன்முறை வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments