Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்ட்களால் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை.. ஒரே ஆண்டில் 7 பாஜகவினர் கொலை..!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (12:44 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் மட்டும் ஏழு பாஜக நிர்வாகிகள் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் அட்டகாசம் செய்து வருகின்றனர் என்பதும் அவர்களை அடக்க மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் தொகுதி பாஜக துணை தலைவர் மாவோயிஸ்ட்களால் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மாவட்ட துணை தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் ஏழு பாஜக உறுப்பினர்கள் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments