Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு.. அதிரடிப்படை பதில் தாக்குதல்..!

ராகுல் காந்தி போட்டியிடும்  வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு..  அதிரடிப்படை பதில் தாக்குதல்..!

Mahendran

, செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:21 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக வ் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், அதிரடி படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் இல்லை எனவும் ஒரு கட்டத்தில் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பியோடி விட்டதாகவும் தெரிகிறது. தப்பியோடிய மாவோயிஸ்டுகளை கம்பமலை பகுதியில் அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.
 
இதே பகுதியில், தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம்..! தேவகவுடாவின் பேரன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்..!!