Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறை பிடித்த வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (18:52 IST)
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரரை சிறை பிடித்த மாவோயிஸ்டுகள் அவரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் – பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சில வீரர்கள் மாயமான நிலையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை சிறை பிடித்து வைத்திருப்பதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவை சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்ற அந்த வீரரை மீட்டு தரும்படி அவரது மனைவி பிரதமர், குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ராகேஸ்வர் சிங் மாவோயிஸ்ட் கேம்ப்பில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாவோயிஸ்டுகள் தங்களுக்கு காவல் துறையுடனோ, பாதுகாப்பு படையுடனோ விரோதம் இல்லை என்றும், ராகெஸ்வர் சிங் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராகேஸ்வர் சிங்கை விடுதலை செய்ய வேண்டுமென்றால் தங்களுடம் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சத்தீஸ்கரில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments