Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வேட்டை! முக்கிய தலைவன் பசவராஜூ சுட்டுக்கொலை!

Prasanth Karthick
வியாழன், 22 மே 2025 (09:00 IST)

ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

 

சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் அதிகமாக உள்ள நிலையில், அவர்களது தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களால் மாநிலங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளை சரணடைய செய்யவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பல மாவோயிஸ்டுகள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர்.

 

அதேசமயம் சரணடையாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான்கு மாவட்ட ரிசர்வ்டு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சமீபமாக சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடனான மோதல் தொடர்ந்து வருகிறது.

 

அபூஜ்மாத் பகுதியில் உள்ள காட்டில் மாவோயிஸ்ட் - ரிசர்வ்டு போலீஸ் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 26க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு தாக்குதல் உள்ளிட்டவற்றில் மூளையாக செயல்பட்டு பல சேதங்களை விளைவித்த பசவராஜூவை பிடிக்க ரூ.1.5 கோடி சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments