Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிஷ் சிசோடியா வங்கி லாக்கர் திறப்பு! – உள்ள என்ன இருந்தது??

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (08:51 IST)
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குறித்த ஊழல் வழக்கில் அவரது வங்கி லாக்கர் சோதனைக்காக திறக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அதேசமயம் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த கெஜ்ரிவாலின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகளை ஏவி விடுவதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. வங்கியில் மனிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி முன்னிலையில் லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய மணிஷ் சிசோடியா “சிபிஐ அதிகாரிகள் யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் செயல்படுகிறார்கள். இன்றைய சோதனைக்கு பின்னர் நான் குற்றமற்றவன் என்பதை சிபிஐ கூறியிருக்கிறது. அவர்கள் எனது வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ குற்றச்சாட்டு தொடர்பான எதையும் கண்டுபிடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் மோடி.. பத்ரிநாத்தில் ரஜினி.. டிரெண்டிங்கில் இரண்டு காவிகள்..!

அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் யூடியூபர்கள்.. அடுத்து சிக்கும் விஜே சித்து..!

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல்.! கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.! டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் நோட்டீஸ்..!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments