Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

Advertiesment
CBI
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:20 IST)
டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் முதலமைச்சராக அரவிந்த் கேஜரிவால் இருந்துவரும் நிலையில் துணை முதலமைச்சராக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்
 
இந்த நிலையில் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் 
 
மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த சோதனை குறித்து துணை முதலமைச்சர் மனிஷ் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்ஜீரியாவில் பயங்கர காட்டுத்தீ; 26 பேர் உடல் கருகி பலியான சோகம்!