Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாய தனிமை - டெல்லி அரசு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (09:23 IST)
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவிப்பு. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்படாத அளவில் அதிகபட்சமாக டெல்லியில் ஒமிக்ரான் பரவி வருகிறது. ஒமிக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஏற்படுத்தியுள்ள மையங்களில் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் சிகிச்சை பெறலாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments