ஜோடி போட்டு பரவும் டெல்டா & ஒமிக்ரான்... WHO எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (09:04 IST)
ஒமிக்ரானுடன், டெல்டாவும் சேர்ந்து பரவுவதால் சுனாமியை போன்று கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை. 

 
தென் ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா மற்றும் புதிய வகை வைரசான ஒமிக்ரான் பரவல் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. 
 
ஒமிக்ரான் வைரசுடன், டெல்டா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுனாமி அலை போன்று அதனுடைய திறனுக்கு அதிகமாக வேகமாக பரவி வருகிறது. டெல்டாவும், ஒமிக்ரானும் ஒன்றாக பரவுவதால் உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.
 
கொரோனா பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதால், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் ஒரு நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments