Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை மாட்டிவிட விஷநாடகம் ஆடிய கணவன் – சின்ன தவறால் வெளிவந்த உண்மை !

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (08:52 IST)
ஆந்திராவில் தனது மனைவியை போலிஸில் சிக்கவைக்க மோரில் விஷம் கலந்துகொடுத்ததாக நாடகம் ஆடிய கணவர் சிக்கியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்த லிங்கையா - நாகமணி தம்பதிகளுக்கு இருவாரங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் மணமக்களை நாகமணி வீட்டில் விருந்துக்கு அழைத்துள்ளனர். விருந்து சாப்பிட்ட லிங்கையா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது அவர் உடலில் இருந்த விஷம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தனது மனைவிதான் மோரில் விஷம் கலந்து கொடுத்ததாக சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக அவர் மனைவியிடம் போலிஸாரிடம் நடத்திய விசாரணையில் தன் கணவருக்கு பால்தான் கொடுத்ததாக கூறி அந்த டம்ளரையும் காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் லிங்கையாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு கல்யாணத்துக்கு முன்னெரே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்ததாகவும் ஆனால் அவரை திருமணம் செய்ய பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காததால் நாகமணியை திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை மீண்டும் திருமணம் செய்யவே மனைவி மேல் கொலைப்பழி சுமத்த தானே விஷத்தைக் குடித்து இப்படி நாடகம் ஆடியதாக ஒத்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் போலிஸாரையும் நாகமணி வீட்டாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments