Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (09:04 IST)
மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கேப்சூல்களை விழுங்கி கடத்திய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அயன் படத்தில் வரும் காட்சி போலவே இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்ட நிலையில், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் வைத்திருந்த பொருளில் எந்த போதைப் பொருளும் இல்லை என்ற நிலையில், தனியரைக்கு சென்று விசாரித்த போது போதைப் பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வருவதாக ஒப்புக்கொண்டார்.
 
இதனை அடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கேப்சூல் வடிவில் போதைப் பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. 785 கிராம் கோகைன் என்ற போதைப் பொருளை மருத்துவர்கள் வெளியே எடுத்த நிலையில், அதன் மதிப்பு ₹7 கோடியே ₹85 லட்சம் என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து உகாண்டா பயணியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த நாட்டிலிருந்து அவர் போதைப் பொருளை கடத்தி வந்தார், மும்பையில் யாருக்கு சப்ளை செய்கிறார் போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments