Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (10:39 IST)
தனது ஆண் குழந்தையை விற்று அதில் செல்போன் வாங்கிய தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலராம் முகி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


 

 
இந்நிலையில், கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பலராம்,  அந்த ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார். அதோடு, அந்த பணத்தில் செல்போன், பெண் குழந்தைக்கு கொலுசு மற்றும் மனைவிக்கு புடவை ஆகியவை வாங்கியுள்ளார்.
 
இந்த விவகாரம் எப்படியோ வெளியே கசிய, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சோம்நாத் சேதி என்பவரிடம் பலராம் தனது குழந்தையை விற்றுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
சோம்நாத்திடம் நடத்திய விசாரணையில், அவரின் 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது மனைவியின் வேதனையை போக்க, பலராமிடம் பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments