Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:13 IST)
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பஹிர் என்ற 32 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சங்கீதா என்ற திருநங்கை அவருக்கு அறிமுகமானதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது 
 
இந்த காதலை பஹிர் ரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய மனைவி அவரது காதலை கண்டுபிடித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் இருவரும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்
 
தன் பின் மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்து கொள்ள பஹிர் முடிவு செய்தார். மேலும் மனைவியே இவருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மனைவியின் ஒப்புதலுடன் இந்த திருமணம் நடந்துள்ளதால் சட்ட சிக்கல் எதுவும்  இல்லை என்று கூறப்படுகிறது ஆனால் இந்த திருமணம் குறித்து பரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments