Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போட்ட திட்டம் – கணவனுக்கு நடந்த விபரீதம் !

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:32 IST)
தெலங்கானா மாநிலத்தில் நவீன் என்பவரின் மனைவியும் அவரது  கள்ளக்காதலனும் இணைந்து திட்டமிட்டு செய்த கொலை அம்பலமாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத்தைச் சேர்ந்தவர் நவீன். இவரது மனைவிக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஒருக்கட்டத்தில் இதனையறிந்த நவீன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத இருவரும் வெங்கடேஷை போட்டுத்தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி வீட்டிலிருந்த நவீனை இறைச்சி வாங்கி வருமாறு வெளியே மார்க்கெட்டுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் சென்றவுடன் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி நவீனைத் தொடர்ந்த வெங்கடேஷ் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் இதை ஒரு விபத்து போல மாற்றியுள்ளனர். ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் நவீனின் மனைவியும் வெங்கடேஷும்தான் கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments