Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் பெயரில் அருங்காட்சியகம் … துரிதமாக நடக்கும் பணிகள்- ஸ்டாலின் கருத்து !

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:24 IST)
கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்குள் அவரது பெயரில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் உள்ள காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்கு நேற்று ஸ்டாலின் வந்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது கலைஞரின் மூத்த மகள் செல்வியும் அவரோடு இருந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ’கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து நானும் என்னுடைய தங்கை செல்வியும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். அதற்காக ஒரு நிலத்தை இணைந்து வாங்கியுள்ளோம். அதைப் பதிவு செய்வதற்காகதான் இன்று வந்துள்ளோம். கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்குள் அவரது பெயரிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments