Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போட்ட திட்டம் – கணவனுக்கு நடந்த விபரீதம் !

மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போட்ட திட்டம் – கணவனுக்கு நடந்த விபரீதம் !
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:32 IST)
தெலங்கானா மாநிலத்தில் நவீன் என்பவரின் மனைவியும் அவரது  கள்ளக்காதலனும் இணைந்து திட்டமிட்டு செய்த கொலை அம்பலமாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத்தைச் சேர்ந்தவர் நவீன். இவரது மனைவிக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஒருக்கட்டத்தில் இதனையறிந்த நவீன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத இருவரும் வெங்கடேஷை போட்டுத்தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி வீட்டிலிருந்த நவீனை இறைச்சி வாங்கி வருமாறு வெளியே மார்க்கெட்டுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் சென்றவுடன் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி நவீனைத் தொடர்ந்த வெங்கடேஷ் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் இதை ஒரு விபத்து போல மாற்றியுள்ளனர். ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் நவீனின் மனைவியும் வெங்கடேஷும்தான் கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் பெயரில் அருங்காட்சியகம் … துரிதமாக நடக்கும் பணிகள்- ஸ்டாலின் கருத்து !