Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரசவ அறையில் மனைவி… மருத்துவரின் காதைக் கடித்த கணவரால் பரபரப்பு!

பிரசவ அறையில் மனைவி… மருத்துவரின் காதைக் கடித்த கணவரால் பரபரப்பு!
, திங்கள், 11 மே 2020 (18:50 IST)
ஒடிசா மாநிலத்தில் தன்னை மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவர்களுடன் நடந்த வாக்குவாதத்தில் காதைக் கடித்துள்ளார் ஒரு நபர்.

ஒடிசா மாநிலம் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர் குழு அந்த பெண்ணுக்கு பிரசவ அறையில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அந்த அறைக்கு வெளியே நின்ற அந்தபெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அவர்கள் மறுக்கவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

வாக்குவாதத்தால் கோபமான அந்த பெண்ணின் கணவர் தரணி பிரசாத் மொகபாத்ரா , பெண் மருத்துவர் ஸ்மிருதியை தாக்கிவிட்டு , ஒரு மருத்துவரின் காதைக் கடித்துள்ளார். இதனால் மருத்துவரின் காதில் இருந்து ரத்தம் கொட்ட காதின் சிறு பகுதியும் துண்டாகியுள்ளது. பின்னர் மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணின் கணவரை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் உருவானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பு ரயில்களில் ஏசி இல்லை – ரயில்வே துறை அறிவிப்பு