Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்: முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 21 மே 2020 (07:01 IST)
கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அழிவுவை விட அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
வங்கக்கடலில் உருவாகிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மற்றும் வங்கதேச நாட்டிற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன
 
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயலா மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் சேத மதிப்புகளை கணக்கிடவே 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என்றும் கூறினார்
 
மேலும் இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் பள்ளி கட்டடங்கள் தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளில் தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments