Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானியை கைது செய்ய வேண்டும்: மத்திய நிதி அமைச்சருக்கு மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (08:14 IST)
தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என மம்தா கட்சியின் எம்பிக்கள் நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியை பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து உள்ளது மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக குறைந்தது. 
 
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்று மக்கள் பணத்தை முறைகேடு செய்த அதானியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
 
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments