Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நூலிழையில் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி!

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நூலிழையில் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (08:20 IST)
2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்ததாகவும், அதில் ஒரு விமானத்தில் பயணம் செய்த மம்தா பானர்ஜி நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனி விமானம் ஒன்றில் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு விமானம் அந்த விமானத்துடன் மோதுவது போல் வந்ததாகவும் அந்த விமானத்தின் விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த சம்பவத்தின் போது விமானம் திடீரென கீழ்நோக்கி இறக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி உள்பட விமானத்தில் இருந்த ஒரு சிலர் தூக்கி எறிய பட்டதாகவும் இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவுக்கே அகதிகளாக செல்லும் உக்ரைன் மக்கள்!