Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி: இன்று வழக்கு விசாரணை

நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி: இன்று வழக்கு விசாரணை
, வியாழன், 24 ஜூன் 2021 (08:29 IST)
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியின் மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீண்டும் அம்மாநில முதல்வராக பதவியேற்றார் 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற போதிலும் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் பாஜகவின் சுவேந்துஅதிகாரி என்பவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவை பொறுத்தே மம்தா பானர்ஜி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெக்கஃபே ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் தலைவர் சிறையில் தற்கொலை!